Tuesday, September 08, 2009

அச்சம்


அச்சங்கொள்கிறது மனது
ஆழ்கடல் பயணத்தை எண்ணி
கடல் அழகானதுதான் வெளியிலிருந்து பார்க்கும்வரை
முடிவில்லாது கரையைத் தழுவும் அலைகளாக
முட்டிமோதுகின்றது எனது அச்சங்கலந்த நினைவுகளும்
முரண்பாடானது கடலின் பயணங்கள்
முயல்கிறேன் எனது அச்சத்தைக் களைய
முடிவு தெரியாத கடலின் பயணத்தில்

No comments:

Post a Comment