Wednesday, May 05, 2010

எனக்கு தெரியலையே ..


பார்த்து பார்த்து எல்லாம் செய்தாய் நீ
பார்க்கவே பிடிக்கவில்லை என்கிறாள் அவள்
உயிரே நீதான் என்கிறாய் நீ
உன்னை காணவே சகிக்கவில்லை என்கிறாள் அவள்

வீதி வீதியாய் அலைந்தாய் நீ
விலகிப்போ என்று கத்துகிறாள் அவள்

பேசவே துடித்தாய் நீ
பேச்சுக்கே இடமில்லை என்கிறாள் அவள்

ஒற்றை பார்வைக்கு தவமிருந்தாய் நீ
ஒருதடவை கூட தரவில்லை கனிவான பார்வை அவள்

கரைஞ்சு கரைஞ்சு காதலித்தாய் நீ
காதலிக்கவே இல்லை என்று சத்தியம் செய்கின்றாள் அவள்

என்னடி செய்வேன் என்று புலம்புகிறாய் நீ
எதுவுமே நடக்காத மாதிரி வாழ்கின்றாள் அவள்

இதுதான் காதலா இதுவும் காதலா
புரியாதது நீயா இல்லை அவளா
புரியவில்லை எனக்கு இப்போதும் கூட

உனக்காகவே




ஓ பெண்ணே ..
அலைபோல மோதும்
நினைவுகளை அடக்கம் செய்துவிடு
அருவிபோல ஓடும்
கண்ணீரை துடைத்தெறிந்துவிடு
உறையும் குருதியின்
ஓட்டத்தை துரிதப்படுத்திவிடு
கனக்கின்ற இதயத்தின்
பாரச் சுமைகளை இறக்கிவிடு

உயிருள்ளவரை ..
ஓடத் தயாராக இரு
வாழ்க்கை உனக்கானது
வாழவேண்டும் நீ - தொலைந்து போன
வசந்தங்களை தேடி
மீண்டும் தொடரட்டும் உன் பயணம்
மலருட்டும் இங்கு
புதியதொரு வாழ்வு உனக்காகவே

உனக்காகவே