Monday, October 18, 2010

கடைசி சந்திப்பு

உனதும் எனதுமான சந்திப்பின்
இறுதினாளாக இருக்க வேண்டுமென
இருவரும் ஒருமித்து வேண்டிய நாள்
உன்னால் நானும் என்னால் நீயும்
பகிர்ந்துகொண்ட இன்பங்களை மறந்து
பட்ட கஷ்டங்களை மட்டுமே
நினைவுபடுத்திய நாள்
மெல்லிய வெண்பனியில்
ஏறிட்டு முகத்தினை பார்க்காது
பாதச் சுவடுகளை பார்த்தபடி
பேசிக்கொண்ட நாள்
அறிமுகமான நாளிலிருந்து
அருகிலிருக்க விரும்பிய இதயம்
எப்போது விடைபெறலாம் என
ஏங்கிய நாள்
இதயங்கள் இடம்மாறி
எங்கள் காதல் முறிந்த
கடைசி சந்திப்பு நடந்த நாள்

Saturday, October 02, 2010

இல்லாத போது..

1.பத்து பொருத்தம் பார்த்து
படலமாய் பெண் பார்க்க வந்து
ஊரெல்லாம் விசாரித்து
வந்தவர்கள்
உதறிச் சென்றார்கள் என்னை
சொத்து பொருத்தம்
ஒத்து போகலையாம்

2.பூக்களற்ற தலை
பொட்டில்லா நெற்றி
வர்ணமில்லா புடவை என
அத்தனையும் இல்லாத
அவளை அபகரிக்க
துடிக்கின்றது அரக்கர் கூட்டம்

3.முழுதாய் கலையாத தூக்கம்
அதட்டி எழுப்பும் அலாரம்
இயந்திரமாய் பல்துலக்கி
இரண்டு நிமிட குளியல் போட்டு
காலை கோப்பிக்கு கடிக்க
நேரமின்றி வேலைக்கு
செல்கையிலே வருகிறது
வீட்டு நினைவு ...
கடிகாரம்
நிற்க நேரமில்லை
ஓடணும் நான்

திருமணம்

மனங்களை இணைக்க
வரும் மணம்

மழை
பூமிக்கான பூக்கள்
தூவியது வானம்

வானவில்
வண்ணங்கள் வரைந்த
வான ஓவியம்

விதவை
மலர்கள் சூட
மலருக்கு தடை