Monday, March 19, 2012

வான்நிலா...


வானிருக்கும் நிலாவை
பார்த்து ரசித்ததுண்டு.
அவைக்கான இடைவெளியை-நாம்
எண்ணிப் பார்த்ததில்லை.
எமக்கான இடைவெளி
எவ்வளவாக இருந்தாலும்,
நீயும் என்னில்
என்றும் நிலவை போல...

ஓடம்...


ஆழ்கடலில் என் ஓடம்
அலைகளுக்கு ஏற்றபடி,
விதியால் வீசும் புயலாகவும்,
வீசிக் கொடுக்கும் காற்றாகவும்
உந்தன் நினைவுகள்.
கலங்கரை காணாத என் ஓடம்
காற்றிற்கு ஏற்றபடி
கரை சேரத் துடிக்கிறது...

Sunday, March 18, 2012

என்னை விட்டு நீ ....



நீயில்லாத நாட்களின்
நினைவுகளின் வெறுமை
ஆயிரம் பேர் என்னை
அரவணைத்திருந்தபோதும்
தனிமையயே கொடுத்தது
எனக்கு..................

எங்கனம் புரிந்திருப்பாய்...


நான் பார்த்து ரசித்த நிலா -உன்
பக்கம் வந்திருக்கும்,
பார்க்காமல் போயிருப்பாய்.
தழுவிச் சென்ற தென்றல்
உன்னை வருடிச் சென்றிருக்கும்,
நெருடலாய் உணர்ந்திருப்பாய்.
எனைக் கடந்த கரு மேகம்-உன்
காலடியில் விழுந்திருக்கும்,
வெள்ளம் என்று எண்ணி
விலகி நடந்திருப்பாய்.
என் உணர்வுகளைப் புரியாத
உன்னுள்
புதைந்த என் இதயத்தை - நீ
எங்கனம் புரிந்திருப்பாய்...

கண்ணியம்...


உன் இரும்பான இதயம்
பட்டதும்,
நொருங்கும்
என் கண்ணாடி இதயம்.
பார்க்கிறேன்-அங்கே
மறுபடி உன் விம்பம்.
கேட்கிறேன்-காரணம்
காதலின் கண்ணியமாம்
சொல்கிறது
களவறியாத கண்ணாடி...

காதல்...


மனம் நினைக்கையில்
வடிக்கும் கவிதையிலும்,
உயிர் வலிக்கையில்
ஓடும் கண்ணீரிலும்,
ஒளிந்து கொள்கிறது
என் காதல்...

நினைவுகள்...


நெஞ்சுக் குழியில் இருந்து வெளிவரும்
உன் நினைவுகள்,
தொண்டைக் குழிவரை வந்து
தொலைந்து போகின்றன-உன்னை
துன்பபடுத்தாமல்...

காணிக்கை...


எனை மறந்து உனை நினைக்கும்
மணித்துளிகள்,
தடையின்றி தலையணை நனைக்கும்
கண்ணீர்த்துளிகள்,
மறுப்பின்றி மனதில் இனிக்கும்
கனாத்துளிகள்,
கருவின்றி கலங்க வைக்கும்
கவித்துளிகள்,
இவை யாவும் என் அன்பின்
காணிக்கையாக...

திருப்தி...


நீயற்ற என் வாழ்வு
நிலவற்ற வானம் போன்றது...
வானோடு நிலவிருக்கும் அழகிற்கு
வார்த்தைகள் இல்லை -ஆனால்
உன் நினைவுகள்,
அந்த வானோடு கலந்திருக்கும்
நட்சத்திரங்கள் போன்றவை...
நிலவு போல்,
இடையிடை வந்து போகும்
உன்னைவிட - என்னைப்
பிரியாது இருக்கும் உன் நினைவுகளால்
நான் பூரண திருப்தி அடைகிறேன்...