என்னை மட்டும் தான்
நீ விட்டுப்போகின்றாய்
என நினைத்தேன்
என்னோடு சேர்த்து
ஏன் கவலைகளையும்
விட்டுப்போனாய்
என்னால் முடியவில்லை
எல்லாவற்றையும் தாங்குவதற்கு
என்னோடு வந்துவிடு
அல்லாவிடில்
என்னை நீ கொன்றுவிடு
Sunday, September 18, 2011
Wednesday, July 06, 2011
வெறுமை
இரவின் தண்மையில்
மொட்டை மாடியில் நிலவை ரசித்தபடி
பஸ்ஸின் யன்னலோர இருக்கைகளில்
கடந்து போகும் மலைகளை பார்த்தபடி
தினசரி பயணங்களில் காணும்
ஒவ்வொரு புதுமுகங்களையும் ஆராய்ந்தபடி
கடந்த காலங்களின் கனத்த நிமிடங்களை
மீட்டுப் பார்த்தபடி
முயன்று பார்க்கிறேன்
ஏதாவது எழுதலாம் என்று ....
எங்கேயும் போகமாட்டேன் என
அடம்பிடித்து நிற்கிறது
என்னுடன் ....
Thursday, May 12, 2011
ஒரு மரணம்
இன்றாவது யாரேனும்
இறந்திட வேண்டுமென
பிரார்த்திக்கும்
சவப்பெட்டி கடைக்காரன்
************************
மரணத்துக்காகவே மரணித்த
மலர்களாய் மலர்வளையங்கள்
************************
நீ விட்டுப் போன நாளில்
கண்கள் போதவில்லை - அவள்
கவலை தீர்ப்பதற்கு ..
ஓவென்று கத்தி
ஒப்பாரி வைக்கின்றாள்
***************************
ஊரழைத்து உண்ணவைத்து -உன்னை
உலகில் மீண்டும் வாழவைக்கும்
ஆத்ம சாந்தி அந்தியட்டி.
Saturday, April 16, 2011
அந்நியன்
விடிவெள்ளி மறையாத காலை
விழிதூங்க முடியாத கனவு
விமான பயணம்.....
என்ன வாங்கலாம்
என்ன கொடுக்கலாம்
எல்லோர் நினைவும்
முட்டி மோதிற்று...
அம்மாவுக்கு அப்பாவுக்கு
ஆசைத்தங்கைக்கு
அடுப்படி வரைக்கும் என்ன தேவையோ
கணக்கு போட்டாயிற்று
அம்மா கூட அறுபது நாள்
தங்க போகிறேன்
நினைவின் சுகத்தில்
அந்நாளும் வந்தது ...
அத்தையும் மாமாவும்
ஏயார்போர்டில்
அப்பாவை காணலை
பயணம் தொடங்கிற்று.....
பொண்ணை கொடுத்த இடத்தில
கையை நனைக்கிறதே...
அப்பாவும் அம்மாவும்
அரைநாள் தங்கவும்
சங்கடப்பட
அத்தையிடம் மெல்லகேட்டேன்
அங்கைபோய்
நிக்கபோறியளோ?!
நுளம்பு பிள்ளை
ஆஸ்பத்திரியும் பெரிசில்லை
அவையள் வந்து நிக்கட்டும்
அல்லது போய் பகலோட திரும்பிடுங்கோ
ஓவென்று அலறும்
என்மனது அறியாமல்
அடுக்கிப்போனா அடுக்கடுக்காய்
எங்களின் இரண்டு மாத
ப்ரோக்ராமை
அத்தை வீட்டுக்கு
அடிக்கடி வர
அம்மா சங்கடப்பட
ஆசை தங்கை
என்பிள்ளைகளை தூக்க கூட
பயந்துநிற்க
எனக்கு பிடிக்கும் என்று
அப்பா வாங்கிவந்த
பிலாப்பழம் மணம் வீசியபடி
மூலையில் கிடக்க
எல்லாவற்றிற்கும்
அந்நியனாய் எந்நாட்டில்
நான் ...
விழிதூங்க முடியாத கனவு
விமான பயணம்.....
என்ன வாங்கலாம்
என்ன கொடுக்கலாம்
எல்லோர் நினைவும்
முட்டி மோதிற்று...
அம்மாவுக்கு அப்பாவுக்கு
ஆசைத்தங்கைக்கு
அடுப்படி வரைக்கும் என்ன தேவையோ
கணக்கு போட்டாயிற்று
அம்மா கூட அறுபது நாள்
தங்க போகிறேன்
நினைவின் சுகத்தில்
அந்நாளும் வந்தது ...
அத்தையும் மாமாவும்
ஏயார்போர்டில்
அப்பாவை காணலை
பயணம் தொடங்கிற்று.....
பொண்ணை கொடுத்த இடத்தில
கையை நனைக்கிறதே...
அப்பாவும் அம்மாவும்
அரைநாள் தங்கவும்
சங்கடப்பட
அத்தையிடம் மெல்லகேட்டேன்
அங்கைபோய்
நிக்கபோறியளோ?!
நுளம்பு பிள்ளை
ஆஸ்பத்திரியும் பெரிசில்லை
அவையள் வந்து நிக்கட்டும்
அல்லது போய் பகலோட திரும்பிடுங்கோ
ஓவென்று அலறும்
என்மனது அறியாமல்
அடுக்கிப்போனா அடுக்கடுக்காய்
எங்களின் இரண்டு மாத
ப்ரோக்ராமை
அத்தை வீட்டுக்கு
அடிக்கடி வர
அம்மா சங்கடப்பட
ஆசை தங்கை
என்பிள்ளைகளை தூக்க கூட
பயந்துநிற்க
எனக்கு பிடிக்கும் என்று
அப்பா வாங்கிவந்த
பிலாப்பழம் மணம் வீசியபடி
மூலையில் கிடக்க
எல்லாவற்றிற்கும்
அந்நியனாய் எந்நாட்டில்
நான் ...
Sunday, April 03, 2011
சிதறல்கள்
உனக்கு பிடிக்கும் என்று
ஒவ்வொன்றாய் நான் மாற
உன்னை பிடிக்கலை என்று
உயிரோடு கொன்றாய் என்னை.
*****************************************
நிலவை வெறுக்கவா
கனவை முறைக்கவா
நீயற்ற இரவுகளில்
*****************************************
எல்லாவற்றையும் மாற்றிவிடுவேன்
நினைப்பது போலவே செய்துமுடிப்பேன்
நேற்று மட்டும் மீண்டும் கிடைத்தால்
கனவுகளோடு நேற்று போலவே இன்றும்
****************************************
வசந்தத்தை தொலைத்தவர்கள் வாழ்வில்
தென்றல் என்றும் வீசாது விடினும்
வாடையாவது வீசட்டுமே
வானம் பூமி இரண்டும் வாழ்த்த
வாழும் நாளும் தோன்றட்டுமே
Wednesday, March 09, 2011
மன்னிப்பாயா
மன்னிப்பாயா ??
என்னைச் சுமந்தபடி
சுவரோரமாய் நீ
உன்னைச் சுமந்தபடி
மணமேடையில் நான்
காலங்கள் கடந்தது
கமலியின்
கல்யாண நாளில்
ஹாய் என்கிறாய்
அன்று கழுத்தைக் கொடுத்த நான்
இன்றுனக்கு ஹாய்
சொல்லக் கூட முடியாமல்
கட்டுபட்டு நிற்கின்றேன்
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
என கேட்கிறேன் நான்
அது கேட்க இவளுக்கு மனசிருக்கா
என நினைக்கிறாய் நீ
மன்னிப்பு கேட்பது ஈசி
மன்னித்து விடுவது கஷ்டம்
அட்வைஸ் விடுவது ஈசி
அட்வைஸ் கேட்பது கஷ்டம்
என்னைச் சுமந்தபடி
சுவரோரமாய் நீ
உன்னைச் சுமந்தபடி
மணமேடையில் நான்
காலங்கள் கடந்தது
கமலியின்
கல்யாண நாளில்
ஹாய் என்கிறாய்
அன்று கழுத்தைக் கொடுத்த நான்
இன்றுனக்கு ஹாய்
சொல்லக் கூட முடியாமல்
கட்டுபட்டு நிற்கின்றேன்
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
என கேட்கிறேன் நான்
அது கேட்க இவளுக்கு மனசிருக்கா
என நினைக்கிறாய் நீ
மன்னிப்பு கேட்பது ஈசி
மன்னித்து விடுவது கஷ்டம்
அட்வைஸ் விடுவது ஈசி
அட்வைஸ் கேட்பது கஷ்டம்
காதல் அழிவதில்லை
அன்று போலவே இன்றும்
அவள் வீட்டு வாசலில் நான்
கண்ணில் அதே காதல்
நெஞ்சில் அதே உருக்கம்
மனதில் அதே ஏக்கம்
என்னை வரவேற்கிறாள் அவள்
தன் பேரக் குழந்தையுடன்
காதல் அழிவதில்லை என்பதை
அவள் கண்ணில் தான் நான்
வாசித்தேன் யாசித்தேன்
அவள் வீட்டு வாசலில் நான்
கண்ணில் அதே காதல்
நெஞ்சில் அதே உருக்கம்
மனதில் அதே ஏக்கம்
என்னை வரவேற்கிறாள் அவள்
தன் பேரக் குழந்தையுடன்
காதல் அழிவதில்லை என்பதை
அவள் கண்ணில் தான் நான்
வாசித்தேன் யாசித்தேன்
Tuesday, February 08, 2011
எங்கே போனார்கள்
எதிரே பார்த்தது ரோஜா
எதையோ தேடியபடி நிலா
என்னைப் போலவே அவளும்
இதயத்தை தொலைத்த அவ்
இருவரையும் தேடுகிறாளா
கேள்விக்குறியுடன்
மெல்ல சிரித்தது
திரும்பிப் பார்த்தது நிலா
அழகான ரோஜாவின்
அர்த்தமற்ற வாடல்
அவர்களுக்கான ஏக்கம்
தான் என புரிந்துகொண்டது
எங்கள் இருவரையும் இப்படி
ஏங்க விட்டுவிட்டு
எங்கே போனார்கள்
ஓடத் தொடங்கிற்று
கடற்கரை மணலில்
ஹனிமூனில் அவர்கள்
நாணம் கொண்டு நகர்ந்தது நிலா
மறுநாள் விரைந்தது
மகிழ்வான செய்தி சொல்ல
ரோஜாவைத் தேடி
நிலா முகம் கண்டு
நிம்மதியடைந்தது ரோஜா
இதழ்கள் உதிர்த்து
இன்புற்று கொண்டது
எதையோ தேடியபடி நிலா
என்னைப் போலவே அவளும்
இதயத்தை தொலைத்த அவ்
இருவரையும் தேடுகிறாளா
கேள்விக்குறியுடன்
மெல்ல சிரித்தது
திரும்பிப் பார்த்தது நிலா
அழகான ரோஜாவின்
அர்த்தமற்ற வாடல்
அவர்களுக்கான ஏக்கம்
தான் என புரிந்துகொண்டது
எங்கள் இருவரையும் இப்படி
ஏங்க விட்டுவிட்டு
எங்கே போனார்கள்
ஓடத் தொடங்கிற்று
கடற்கரை மணலில்
ஹனிமூனில் அவர்கள்
நாணம் கொண்டு நகர்ந்தது நிலா
மறுநாள் விரைந்தது
மகிழ்வான செய்தி சொல்ல
ரோஜாவைத் தேடி
நிலா முகம் கண்டு
நிம்மதியடைந்தது ரோஜா
இதழ்கள் உதிர்த்து
இன்புற்று கொண்டது
Monday, February 07, 2011
காதல் ஓவியம்
ஆதவன் அஸ்தமிக்க
அலைகடல் ஆர்ப்பரிக்க
வெண்மேகம் விலகிஓட
வெள்ளியெல்லாம் பூத்திருக்க
தேடத் தொடங்கிற்று நிலா
அவன் ஆருயிர் காதலியை
அல்லும் பகலும் என
தேடித் திரிந்த நிலா
இருவாரம் ஆனதும்
இத்துப் போயிற்று
இனியவளைக் காணாமல்
காத்திருந்த காதலனின்
காதல் ஓவியம்
களை இழந்து போனதால்
கருமேகம் சூழ்ந்து கொண்டது
கடலலை கூட
அமைதியாய் ஆனது
இவ்வுயிர்க் காதலன்
இதயத் துடிப்பைப் போல
இடியும் இடித்தது
இழப்பினை தாங்காத
இவன் அழுகையோடு
வானத்தின் கண்ணீரும்
சங்கமமாகியது
அலைகடல் ஆர்ப்பரிக்க
வெண்மேகம் விலகிஓட
வெள்ளியெல்லாம் பூத்திருக்க
தேடத் தொடங்கிற்று நிலா
அவன் ஆருயிர் காதலியை
அல்லும் பகலும் என
தேடித் திரிந்த நிலா
இருவாரம் ஆனதும்
இத்துப் போயிற்று
இனியவளைக் காணாமல்
காத்திருந்த காதலனின்
காதல் ஓவியம்
களை இழந்து போனதால்
கருமேகம் சூழ்ந்து கொண்டது
கடலலை கூட
அமைதியாய் ஆனது
இவ்வுயிர்க் காதலன்
இதயத் துடிப்பைப் போல
இடியும் இடித்தது
இழப்பினை தாங்காத
இவன் அழுகையோடு
வானத்தின் கண்ணீரும்
சங்கமமாகியது
Friday, February 04, 2011
தவிப்பு
என் நிம்மதியை தொலைத்த
நம்பிக்கையை சிதைத்த
உன்மீது
கோவிக்க முடியாமலும்
மன்னிக்க தெரியாமலும்
சுழலும் இப்பொழுதில்
என்னை எப்படி
நான் புரிந்துகொள்வது
விடைகளற்ற வினாவாக
உன்னை பற்றிய
என் நினைவுகள்
தொடர்கின்றது
நம்பிக்கையை சிதைத்த
உன்மீது
கோவிக்க முடியாமலும்
மன்னிக்க தெரியாமலும்
சுழலும் இப்பொழுதில்
என்னை எப்படி
நான் புரிந்துகொள்வது
விடைகளற்ற வினாவாக
உன்னை பற்றிய
என் நினைவுகள்
தொடர்கின்றது
Sunday, January 30, 2011
வாழ்க பல்லாண்டு
கொஞ்சம் கோபம்
சின்ன பொறாமை
மெல்லிய கவலை
முழுசாய் நிம்மதி
மூளையில் சந்தோசம்
என உணர்வுகளின்
குழப்பத்தில்
உன் கல்யாண
வீட்டில் நான்
சின்ன பொறாமை
மெல்லிய கவலை
முழுசாய் நிம்மதி
மூளையில் சந்தோசம்
என உணர்வுகளின்
குழப்பத்தில்
உன் கல்யாண
வீட்டில் நான்
Monday, October 18, 2010
கடைசி சந்திப்பு
உனதும் எனதுமான சந்திப்பின்
இறுதினாளாக இருக்க வேண்டுமென
இருவரும் ஒருமித்து வேண்டிய நாள்
உன்னால் நானும் என்னால் நீயும்
பகிர்ந்துகொண்ட இன்பங்களை மறந்து
பட்ட கஷ்டங்களை மட்டுமே
நினைவுபடுத்திய நாள்
மெல்லிய வெண்பனியில்
ஏறிட்டு முகத்தினை பார்க்காது
பாதச் சுவடுகளை பார்த்தபடி
பேசிக்கொண்ட நாள்
அறிமுகமான நாளிலிருந்து
அருகிலிருக்க விரும்பிய இதயம்
எப்போது விடைபெறலாம் என
ஏங்கிய நாள்
இதயங்கள் இடம்மாறி
எங்கள் காதல் முறிந்த
கடைசி சந்திப்பு நடந்த நாள்
இறுதினாளாக இருக்க வேண்டுமென
இருவரும் ஒருமித்து வேண்டிய நாள்
உன்னால் நானும் என்னால் நீயும்
பகிர்ந்துகொண்ட இன்பங்களை மறந்து
பட்ட கஷ்டங்களை மட்டுமே
நினைவுபடுத்திய நாள்
மெல்லிய வெண்பனியில்
ஏறிட்டு முகத்தினை பார்க்காது
பாதச் சுவடுகளை பார்த்தபடி
பேசிக்கொண்ட நாள்
அறிமுகமான நாளிலிருந்து
அருகிலிருக்க விரும்பிய இதயம்
எப்போது விடைபெறலாம் என
ஏங்கிய நாள்
இதயங்கள் இடம்மாறி
எங்கள் காதல் முறிந்த
கடைசி சந்திப்பு நடந்த நாள்
Saturday, October 02, 2010
இல்லாத போது..
1.பத்து பொருத்தம் பார்த்து
படலமாய் பெண் பார்க்க வந்து
ஊரெல்லாம் விசாரித்து
வந்தவர்கள்
உதறிச் சென்றார்கள் என்னை
சொத்து பொருத்தம்
ஒத்து போகலையாம்
2.பூக்களற்ற தலை
பொட்டில்லா நெற்றி
வர்ணமில்லா புடவை என
அத்தனையும் இல்லாத
அவளை அபகரிக்க
துடிக்கின்றது அரக்கர் கூட்டம்
3.முழுதாய் கலையாத தூக்கம்
அதட்டி எழுப்பும் அலாரம்
இயந்திரமாய் பல்துலக்கி
இரண்டு நிமிட குளியல் போட்டு
காலை கோப்பிக்கு கடிக்க
நேரமின்றி வேலைக்கு
செல்கையிலே வருகிறது
வீட்டு நினைவு ...
படலமாய் பெண் பார்க்க வந்து
ஊரெல்லாம் விசாரித்து
வந்தவர்கள்
உதறிச் சென்றார்கள் என்னை
சொத்து பொருத்தம்
ஒத்து போகலையாம்
2.பூக்களற்ற தலை
பொட்டில்லா நெற்றி
வர்ணமில்லா புடவை என
அத்தனையும் இல்லாத
அவளை அபகரிக்க
துடிக்கின்றது அரக்கர் கூட்டம்
3.முழுதாய் கலையாத தூக்கம்
அதட்டி எழுப்பும் அலாரம்
இயந்திரமாய் பல்துலக்கி
இரண்டு நிமிட குளியல் போட்டு
காலை கோப்பிக்கு கடிக்க
நேரமின்றி வேலைக்கு
செல்கையிலே வருகிறது
வீட்டு நினைவு ...
Sunday, September 05, 2010
வாழ்த்துக்கள்
என் அருகில் நீ...
சொல்லேன்டா என
என் மனமும்
சொல்லிவிடுடா
என உன் கண்களும்
சண்டை போட்டுக்கொள்ள
ஏதோ தடுத்தது
எத்தனை தடவை
எத்தனை விதமாய்
ஒத்திகை பார்த்தேன்
எப்படி என் அத்தனை
துணிவையும் கொள்ளை
கொண்டாய்
உன் ஒற்றை பார்வையால்
சொல்லாத காதல்
இதயத்தை நொறுக்க
சோககீதங்கள்
நெஞ்சிற்குள் ஒலிக்க
வந்திருக்கிறேன்
இன்று நான்
மணவாழ்த்துக்கள் கூற
உன்னிடத்தில்.
சொல்லேன்டா என
என் மனமும்
சொல்லிவிடுடா
என உன் கண்களும்
சண்டை போட்டுக்கொள்ள
ஏதோ தடுத்தது
எத்தனை தடவை
எத்தனை விதமாய்
ஒத்திகை பார்த்தேன்
எப்படி என் அத்தனை
துணிவையும் கொள்ளை
கொண்டாய்
உன் ஒற்றை பார்வையால்
சொல்லாத காதல்
இதயத்தை நொறுக்க
சோககீதங்கள்
நெஞ்சிற்குள் ஒலிக்க
வந்திருக்கிறேன்
இன்று நான்
மணவாழ்த்துக்கள் கூற
உன்னிடத்தில்.
Wednesday, May 05, 2010
எனக்கு தெரியலையே ..

பார்த்து பார்த்து எல்லாம் செய்தாய் நீ
பார்க்கவே பிடிக்கவில்லை என்கிறாள் அவள்
உயிரே நீதான் என்கிறாய் நீ
உன்னை காணவே சகிக்கவில்லை என்கிறாள் அவள்
வீதி வீதியாய் அலைந்தாய் நீ
விலகிப்போ என்று கத்துகிறாள் அவள்
பேசவே துடித்தாய் நீ
பேச்சுக்கே இடமில்லை என்கிறாள் அவள்
ஒற்றை பார்வைக்கு தவமிருந்தாய் நீ
ஒருதடவை கூட தரவில்லை கனிவான பார்வை அவள்
கரைஞ்சு கரைஞ்சு காதலித்தாய் நீ
காதலிக்கவே இல்லை என்று சத்தியம் செய்கின்றாள் அவள்
என்னடி செய்வேன் என்று புலம்புகிறாய் நீ
எதுவுமே நடக்காத மாதிரி வாழ்கின்றாள் அவள்
இதுதான் காதலா இதுவும் காதலா
புரியாதது நீயா இல்லை அவளா
புரியவில்லை எனக்கு இப்போதும் கூட
உனக்காகவே

ஓ பெண்ணே ..
அலைபோல மோதும்
நினைவுகளை அடக்கம் செய்துவிடு
அருவிபோல ஓடும்
கண்ணீரை துடைத்தெறிந்துவிடு
உறையும் குருதியின்
ஓட்டத்தை துரிதப்படுத்திவிடு
கனக்கின்ற இதயத்தின்
பாரச் சுமைகளை இறக்கிவிடு
உயிருள்ளவரை ..
ஓடத் தயாராக இரு
வாழ்க்கை உனக்கானது
வாழவேண்டும் நீ - தொலைந்து போன
வசந்தங்களை தேடி
மீண்டும் தொடரட்டும் உன் பயணம்
மலருட்டும் இங்கு
புதியதொரு வாழ்வு உனக்காகவே
Monday, April 12, 2010
தடை ..

இரவுக்கும் பகலுக்கும்
யுத்தம் நடக்கும்
காலைப் பொழுது
குளிர்மை நீங்கா
அதிகாலை காற்று
தூக்கம் கலையாத
முகங்களுடன்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
காலை மனிதர்கள்
பறந்து வந்தன
ஜோடிக் குருவிகள்
பார்வைகளில்
காதல் மின்ன
படபடவென்று
பேசிக் கொண்டன
அலகால தலைகோத
கட்டிக்கொண்டது
மற்றக்குருவி
வெட்கப்பட்டு திரும்புகையில்
பறந்து வந்தது
இன்னோர் குருவி
உலகம் மறந்து
ஒன்றித்து நின்றவை
ஒருவித திகிலுடன்
விலகிப் போயின
வில்லன் குருவி
பக்கத்தில் வர
விரைந்து பறந்தது
ஜோடியில் ஒன்று
ஏக்கத்தோடு மற்ற குருவி
என்னை பார்க்கையில்
எனக்கும் மெல்ல அழுகை வந்தது
காதலில் தடை
காக்கைக்கும் வருமோ?
யுத்தம் நடக்கும்
காலைப் பொழுது
குளிர்மை நீங்கா
அதிகாலை காற்று
தூக்கம் கலையாத
முகங்களுடன்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
காலை மனிதர்கள்
பறந்து வந்தன
ஜோடிக் குருவிகள்
பார்வைகளில்
காதல் மின்ன
படபடவென்று
பேசிக் கொண்டன
அலகால தலைகோத
கட்டிக்கொண்டது
மற்றக்குருவி
வெட்கப்பட்டு திரும்புகையில்
பறந்து வந்தது
இன்னோர் குருவி
உலகம் மறந்து
ஒன்றித்து நின்றவை
ஒருவித திகிலுடன்
விலகிப் போயின
வில்லன் குருவி
பக்கத்தில் வர
விரைந்து பறந்தது
ஜோடியில் ஒன்று
ஏக்கத்தோடு மற்ற குருவி
என்னை பார்க்கையில்
எனக்கும் மெல்ல அழுகை வந்தது
காதலில் தடை
காக்கைக்கும் வருமோ?
Saturday, April 10, 2010

பெண் என்றால் ......
என் முன்னாலேயே
இன்னொரு பெண்ணை
சப்பை பிகருடா என்று
சலிச்சு கொண்டவன்
என் போட்டோ ஒன்றுக்கு
fb யில் பால்ய நண்பன்
ஏதோ எழுதி இருந்ததை
பார்த்து எரிந்து விழுகிறான்
நான் தனக்கு மட்டுமே தானாம்..
என் முன்னாலேயே
இன்னொரு பெண்ணை
சப்பை பிகருடா என்று
சலிச்சு கொண்டவன்
என் போட்டோ ஒன்றுக்கு
fb யில் பால்ய நண்பன்
ஏதோ எழுதி இருந்ததை
பார்த்து எரிந்து விழுகிறான்
நான் தனக்கு மட்டுமே தானாம்..
நெற்றிக்கு குங்குமம்
காலுக்கு மெட்டி
கழுத்துக்கு தாலி
என்று சம்பிரதாயங்களில்
வேலி போட்டு
பாதுகாத்து கொள்கிறார்கள்
மனைவியை
மனசு இருப்பதை
அறியாத மனிதர்கள்
Subscribe to:
Comments (Atom)










