Monday, March 19, 2012
ஓடம்...
ஆழ்கடலில் என் ஓடம்
அலைகளுக்கு ஏற்றபடி,
விதியால் வீசும் புயலாகவும்,
வீசிக் கொடுக்கும் காற்றாகவும்
உந்தன் நினைவுகள்.
கலங்கரை காணாத என் ஓடம்
காற்றிற்கு ஏற்றபடி
கரை சேரத் துடிக்கிறது...
Sunday, March 18, 2012
என்னை விட்டு நீ ....
எங்கனம் புரிந்திருப்பாய்...

நான் பார்த்து ரசித்த நிலா -உன்
பக்கம் வந்திருக்கும்,
பார்க்காமல் போயிருப்பாய்.
தழுவிச் சென்ற தென்றல்
உன்னை வருடிச் சென்றிருக்கும்,
நெருடலாய் உணர்ந்திருப்பாய்.
எனைக் கடந்த கரு மேகம்-உன்
காலடியில் விழுந்திருக்கும்,
வெள்ளம் என்று எண்ணி
விலகி நடந்திருப்பாய்.
என் உணர்வுகளைப் புரியாத
உன்னுள்
புதைந்த என் இதயத்தை - நீ
எங்கனம் புரிந்திருப்பாய்...
கண்ணியம்...
காதல்...
நினைவுகள்...
காணிக்கை...
திருப்தி...
Wednesday, March 07, 2012
Friday, March 02, 2012
Friday, December 16, 2011
தப்பு...
மறைந்த மறவர்களுக்காக...

மண்ணை நினைத்ததும்
மனசு குளறுது மடிந்த மறவர்களே... - உம்மை
நெஞ்சம் நினைக்காத
நேரம் ஒன்றில்லை நேய வீரர்களே...
பூத்துக் கிடந்த மண்
வெந்து கிடக்குது பொறுக்க முடியலையே...
பொது இடத்தில் கூட நம் மனம் திறந்து
ஒரு சொல் சொல்ல முடியலையே...
புலம் பெயர் தமிழன்
வேர்வை எல்லாம் புல்லுக்கு பாய்கிறதே...
புண்ணாய்ப் போன எங்கள் மனசில்
வேல் தான் பாய்கிறதே...
காற்று வீசிடும் என்கிற நம்பிக்கை
காத்துக் கிடக்கின்றோம்...
காலத்தால் அழியாத உங்கள் கல்லறை
கண்டு பணிகின்றோம்...
என்றும் உங்கள் நினைவுகளுடன்...........
மலரே...

மொட்டென்னும் பெயரில்
சட்டென்று வளர்வாயடி...
ஒரு சில நாளில்
உன் முகம் திறப்பாயடி...
ஓராயிரம் பேர்
உன்னை ரசிப்பாரடி...
ஒருவனுக்காக நீ
காத்து இருப்பாயடி...
உன்னை நாடி வரும் - வண்டின்
ஓசை அறிவாயடி...
ஒத்திகை இல்லாமல்
உன்னைக் கொடுப்பாயடி...
தேடி வந்தவன்
தேவை முடியுமடி... - அவன்
திரும்ப நினைக்கையிலே -உன்
திரு முகம் வாடுமடி...
வாழ்ந்த ஒரு நாளில்
வள்ளலாய் வாழ்வாயடி...
இறந்தும் உன் உடல்
மண்ணுக்கிரையாகுமடி ...
மலரே இதுதான் வாழ்வின் நியதியடி...
மறந்தும் மறுபிறப்பு பிறக்க நினைக்காதே...
புண்ணாகும் மனசு...

சேற்றில் பிறந்த தாமரை,
புனிதமாகி அந்தப்
பெருமாளை சென்றடைகிறது...
சிப்பிக்குள் வளர்ந்த முத்து,
பெறுமதி மிக்கதாகி
பேரம் பேசப்படுகிறது...
மண்ணுக்குள் உருவான பொன்,
மலை போல் விலை பேசி
மதிப்புக் கொடுக்கப்படுகிறது...
மடியில் சுமந்த உன் அன்னை
பண்ணிய தவறுக்கு அறியாமல் பிறந்த -உன்
மனசு மட்டும் ஏன் புண்ணாக்கப்படுகிறது...
இந்த மனசறியா மானிடர்களால்.....
தண்டவாளங்கள்...

அங்கே பார்க்கிறாயா,
இருதண்டவாளங்களை...
அதிலே போகிறதே புகைவண்டி
அதுதான் - நம்
புனிதமான காதல் போல...
ரயில் பயணங்கள் ஒவ்வொன்றும் - நம்
இனிமையான நினைவுகள் போல...
ரயிலின் உரசல்கள் எல்லாம் - நம்
நெஞ்சம் தாங்கும் வலிகள் போல...
அதில் வரும் அதிர்வுகள் எல்லாம் - நம்
இதயங்களின் துடிப்புகள் போல...
இத்தண்டவாளங்கள்,
இறுதிவரை பிரியப்போவதில்லை
நம்மைப்போல...
கடன்...
நீ அறிவாயா...
Sunday, October 02, 2011
பிரிவது எப்படி?
உறவே
என் கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்.
என் உயிரோடு கலந்துவிட்ட
உன்னைப் பிரிவது எப்படி?
என் கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்.
என் உயிரோடு கலந்துவிட்ட
உன்னைப் பிரிவது எப்படி?
என்னோடு உன் காதல்
உன் வார்த்தை சுகமானது
என் நெஞ்சோடு இனிக்கின்றது...
உன் நேசம் பொல்லாதது
என்னைக் கொல்லாமல் கொல்கின்றது...
உன் காதல் வலியானது
என் கண்ணோடு வழிகின்றது ...
என் வாழ்க்கை ஒன்றானது
தினம் விதியோடு அழுகின்றது...
Subscribe to:
Posts (Atom)












