உன் விழிகள்
கவிதையான போது
என் மொழிகள்
ஊமையாகிப் போயின
Saturday, October 13, 2012
நீ தந்த..
என்ன தந்து
நீ செல்கின்றாய்
என கேட்க முடியாது...
எண்ணற்ற
ஏமாற்றங்களை
நீ தந்துதானே
போயிருக்கின்றாய்???
தொடரும் மௌனம்
முற்றுப் பெறாத
விவாதங்களை விட
முடிவற்ற மௌனங்கள்
பிரச்சினைகளை
தீர்க்குமெனில்
நானும்
ஆசீர் வதிக்கின்றேன்
அவை தொடரட்டுமே...
Monday, March 19, 2012
வான்நிலா...
வானிருக்கும் நிலாவை
பார்த்து ரசித்ததுண்டு.
அவைக்கான இடைவெளியை-நாம்
எண்ணிப் பார்த்ததில்லை.
எமக்கான இடைவெளி
எவ்வளவாக இருந்தாலும்,
நீயும் என்னில்
என்றும் நிலவை போல...
ஓடம்...
ஆழ்கடலில் என் ஓடம்
அலைகளுக்கு ஏற்றபடி,
விதியால் வீசும் புயலாகவும்,
வீசிக் கொடுக்கும் காற்றாகவும்
உந்தன் நினைவுகள்.
கலங்கரை காணாத என் ஓடம்
காற்றிற்கு ஏற்றபடி
கரை சேரத் துடிக்கிறது...
Sunday, March 18, 2012
என்னை விட்டு நீ ....
எங்கனம் புரிந்திருப்பாய்...

நான் பார்த்து ரசித்த நிலா -உன்
பக்கம் வந்திருக்கும்,
பார்க்காமல் போயிருப்பாய்.
தழுவிச் சென்ற தென்றல்
உன்னை வருடிச் சென்றிருக்கும்,
நெருடலாய் உணர்ந்திருப்பாய்.
எனைக் கடந்த கரு மேகம்-உன்
காலடியில் விழுந்திருக்கும்,
வெள்ளம் என்று எண்ணி
விலகி நடந்திருப்பாய்.
என் உணர்வுகளைப் புரியாத
உன்னுள்
புதைந்த என் இதயத்தை - நீ
எங்கனம் புரிந்திருப்பாய்...
கண்ணியம்...
காதல்...
நினைவுகள்...
காணிக்கை...
திருப்தி...
Wednesday, March 07, 2012
Friday, March 02, 2012
Friday, December 16, 2011
தப்பு...
Subscribe to:
Posts (Atom)











