Saturday, October 13, 2012

உறவென்று சொல்லியிருந்தால்
ஒரு நாள்
நானும் மறந்திருப்பேன் உன்னை
நீ உயிரென்றல்லா
சொல்லி சென்றாய்
ஆதலால் துடிக்கிறேன்
நானிங்கு..நீயற்று...
எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்திற்கு
காரணமோ இல்லையோ
எனக்கும் உனக்குமான
எல்லா சண்டைக்கும்
அவைதான் காரணம்..
கதியற்று நிற்பவன்
கையறு நிலையில்
கடவுளே கதி
என்று நினைக்கையில்
நாத்திகம் பேசுவது அநாகரீகம்..
உலகில் உன்னை வென்ற திருடி தெரியாது எனக்கு
எனக்குள் துடித்து உனக்காய் வாழ்கிறதே..
என் இதயம்
அளவற்ற மோதிரம் ஒன்று
பிடித்துப் போனதால்
அவஸ்தையே எனக்கு
மிஞ்சிப் போனது..
இளையராஜாவும்
இந்த ஏகாந்தமும்
எரிச்சலூட்டும் இரவுகளில்
என்னை யார் தாலாட்டுவார்
என நீ விட்டுப் போனாய்??
உன்னை கோபிக்கும் கணங்களில் தான் யோசிக்கின்றேன்
நான் உன்னை எவ்வளவு நேசிக்கின்றேன் என்று..
அக்காக்கு குழந்தையாம்
ஆசையாய் வந்த மாமன்
உட்கார்ந்து அழுதிச்சாம்
அடுத்ததும் பெட்டை என்று
என் பிறப்பின் இரகசியம்..
ஐந்து நிமிடம் கதைத்தவர்களையே
மறந்துவிடாமல் இருக்கையில்..
ஆயுசுக்கும் நீதான்
என நினைத்த உன்னை
எப்படி மறப்பேன் சொல்லு??
எங்கு, எப்படி விழுந்தேன் என்று தெரியவில்லை..
எழ முடியாமல் விழுந்து கிடக்கின்றேன்
என்பது மட்டும் தெரிகின்றது உன்னிடத்தில்..
நினைவுகளை அழிக்கவில்லை
அதில் நீ வாழ்கின்றாய் என்பதால்..
கனவுகளை அழிக்கின்றேன்
என் கண்ணீரால்
அது கற்பனை ஆனதால்..
விடுதலை எண்ணமே
எனக்கு இல்லை
விழுந்து கிடப்பது
உன் நினைவுச் சிறைக்குள் என்பதால்.
உன் விழிகள்
கவிதையான போது
என் மொழிகள்
ஊமையாகிப் போயின
என் காயங்களின் இரத்தம்
எழுத்துக்களில் வடிந்துவிடத் துடிக்கிறது..
நடக்காது என்று தெரிந்தும்
நடப்பது பற்றியே கற்பனை விரித்து
எதிர்பார்த்திருக்கும் நாட்களில்
ஏமாற்றங்களைத் தவிர
என்ன மிஞ்சும் என்னோடு??????

என் கனவுகள்
எல்லாம்
பனித்துளியாய்
காலையிலேயே
கரைகின்றன..

நீ தந்த..



என்ன தந்து
நீ செல்கின்றாய்
என கேட்க முடியாது...
எண்ணற்ற
ஏமாற்றங்களை
நீ தந்துதானே
போயிருக்கின்றாய்???

தொடரும் மௌனம்



முற்றுப் பெறாத
விவாதங்களை விட
முடிவற்ற மௌனங்கள்
பிரச்சினைகளை
தீர்க்குமெனில்
நானும்
ஆசீர் வதிக்கின்றேன்
அவை தொடரட்டுமே...

சருகு

கிளையிலிருந்து
உதிரும் இலையாக
என் கனவுகள்
சருகாகின்றது

புன்னகை


உன் உதடுகள்
புன்னகைக்க மறுத்ததால்
வறண்டு கிடக்கிறது
இந்தப் பூமி