Tuesday, July 21, 2009

பயணம்

நண்பனே!
ஒரே இலக்கில் இருவரும் புறப்பட்டோம்!
பாதை தெரியாது; பயணம் புதிது,
பயணம் பற்றிய சந்தேகத்தை மறைத்து, - எனினும்
மனதில் இலக்கை மட்டும் நினைத்துக்கொண்டோம்!
ஒருவருக்கொருவர் நம்பிக்கையூட்டினோம்!
இலக்கை எட்டுமுன் இருவரும் திசைமாறினோம்!
இப்போதுதான் உன்னைப்போலவே நானும் அறிந்துகொண்டேன்..
ஏற்கனவே பலர் எம்போன்று திசைமாறியிருப்பதை!

No comments:

Post a Comment