புரிந்து கொள்ளாமல்
பிரிந்து கொல்கின்றாய்
என்னை
நீ...
அரும்பு
Thursday, January 24, 2013
Saturday, October 13, 2012
என் காதல்
காத்திருந்து
தருணம் பார்த்து
நடுங்கியபடி
வாய்குழற
உன்னிடம்
என் காதலைச்
சொன்னபோது
சொன்னாய்
நான்
அவனை
காதலிக்கிறேனென்று..
தருணம் பார்த்து
நடுங்கியபடி
வாய்குழற
உன்னிடம்
என் காதலைச்
சொன்னபோது
சொன்னாய்
நான்
அவனை
காதலிக்கிறேனென்று..
எங்கே நான்?
கிறுக்கிய கவிதைகள்
எழுதிய கடிதங்கள்
அனுப்பிய வாழ்த்துக்கள்
என்று அத்தனையையும்
பத்திரப்படுத்திய நீ
என் இதயத்தை மட்டும்
ஏன் தொலைத்தாய்??
ஏன் கற்றுத் தந்தாய்?
காதலை எனக்கும் கற்றுத் தந்துவிட்டு
காணாமல் நீ போய்விட
கனவுகளை விரட்டுவதற்காய்
நினைவுகளோடு போராடியபடி நான்...
காதல்..
வலியில் துடிக்கையில்
வரிகள் தேடுறேன்
வார்த்தையின்றி
நான் புலம்பித் தவிக்கின்றேன்
கண்கள் எழுதிய
காதல் கதையின்று
கலைந்து போனதால்
கண்ணீர் நதியிங்கு
இரவின் மடியிலே
உறக்கம் தொலைத்து நான்
நினைவு ஊஞ்சலில்
நித்தம் சுழல்கின்றேன்
எனக்கு நீயென
எழுதிய எழுத்தில்
எழுத்துப் பிழைகள்
எதற்கு வந்தது
காதல் படகொன்று
கவிழ்ந்து கொண்டதில்
கரையில் இருந்தும்
நான் தத்தளிக்கின்றேன்.
Subscribe to:
Posts (Atom)