Thursday, January 24, 2013

புரிந்து கொள்ளாமல்
பிரிந்து கொல்கின்றாய்
என்னை
நீ...

Saturday, October 13, 2012

என் காதல்

காத்திருந்து
தருணம் பார்த்து
நடுங்கியபடி
வாய்குழற
உன்னிடம்
என் காதலைச்
சொன்னபோது
சொன்னாய்
நான்
அவனை
காதலிக்கிறேனென்று..

என்னோடு நீ


நிஜங்களை வேண்டுமானால்
நீ ஊமையாக்கியிருக்கலாம்
என் நினைவுகளையோ
கனவுகளையோ அல்ல..

கலைந்த கனவுகள்


நிஜங்கள் மாறி
நிறமற்றுப் போனதால்
என் கண்கள் சுமந்த
கனவுகள் எல்லாம்
இன்று கண்ணீராய்...

எங்கே நான்?


கிறுக்கிய கவிதைகள்
எழுதிய கடிதங்கள்
அனுப்பிய வாழ்த்துக்கள்
என்று அத்தனையையும்
பத்திரப்படுத்திய நீ
என் இதயத்தை மட்டும்
ஏன் தொலைத்தாய்??


"Death leaves a heartache no one can heal,
Love leaves a memory no one can steal"

ஏன் கற்றுத் தந்தாய்?


காதலை எனக்கும் கற்றுத் தந்துவிட்டு
காணாமல் நீ போய்விட
கனவுகளை விரட்டுவதற்காய்
நினைவுகளோடு போராடியபடி நான்...

கவி


உன்னோடு பேசாத நேரங்களில்
பிறக்கின்றது கவிக் குழந்தைகள்

வானும் மண்ணும்


வானும் மண்ணும் போல
நீயும் நானும்
பிரிந்துதான் இருக்கின்றோம்
நினைவுகளில் சுற்றியபடி..

கவி


ஒற்றைவரிக் கவிதை கேட்டாய்
கவிதையொன்றே
கவிதை கேட்டதால்
விக்கித்துப் போயின சொற்கள்.

உன் காதல்..


பாலைவனத்தில் நின்றுகொண்டு
பூக்கள் தேடிப் பாடும்
பைத்தியக்காரியாய்
என்னை மாற்றியது
உன் காதல்..
கேவிக் கேவி
அழுகின்றேன் நான்
கெக்கட்டம் விட்டுச்
சிரிக்கின்றன
உன் நினைவுகள் என்னுள்..
திருவிழாவொன்றில்
தாயைத் தேடும்
குழந்தையைப் போல
உன்னைத் தேடி
நான் தொலைகின்றேன் அன்பே..
நெஞ்சுக் கூடு காலியாகி
எண்ணங்கள் தொலைந்துபோய்
இனம்புரியாத வலியொன்று
இதயத்தை துளைக்க
இங்கே நான் நடைபிணமாக...

காதல்..


வலியில் துடிக்கையில்
வரிகள் தேடுறேன்
வார்த்தையின்றி
நான் புலம்பித் தவிக்கின்றேன்
கண்கள் எழுதிய
காதல் கதையின்று
கலைந்து போனதால்
கண்ணீர் நதியிங்கு
இரவின் மடியிலே
உறக்கம் தொலைத்து நான்
நினைவு ஊஞ்சலில்
நித்தம் சுழல்கின்றேன்
எனக்கு நீயென
எழுதிய எழுத்தில்
எழுத்துப் பிழைகள்
எதற்கு வந்தது
காதல் படகொன்று
கவிழ்ந்து கொண்டதில்
கரையில் இருந்தும்
நான் தத்தளிக்கின்றேன்.
போடா என்று சொல்லிவிட்டு
புலம்புகின்றேன்
நானடா
நீ போனபின்பு பின்னால் நின்று
ஏங்குகின்றேன்
ஏனடா?
இதயத்தில் கதையெழுதி இறகாலே வருடிவெட்டு எங்கேயோ நீயும் போக இங்கிருந்து பாடுகின்றேன்...

கண்ணாடிக் குவளைக்குள்
மோதும் மீனாக
உன் நினைவுகளோடு
என் மோதல்..
மீன்தொட்டி இப்போது
பிடிக்காமல் போயிற்று
ஆயுள் கைதியான
அண்ணனை நினைவுபடுத்துவதால்..
உன் துப்பாக்கி முனையில் விரிவதால்
என் புன்னகையும் பொய்ச்சாயம் பூசுகிறது..