Sunday, October 02, 2011

பிரிவது எப்படி?

உறவே
என் கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்.
என் உயிரோடு கலந்துவிட்ட
உன்னைப் பிரிவது எப்படி?

என்னோடு உன் காதல்


உன் வார்த்தை சுகமானது
என் நெஞ்சோடு இனிக்கின்றது...
உன் நேசம் பொல்லாதது
என்னைக் கொல்லாமல் கொல்கின்றது...
உன் காதல் வலியானது
என் கண்ணோடு வழிகின்றது ...
என் வாழ்க்கை ஒன்றானது
தினம் விதியோடு அழுகின்றது...