Sunday, January 31, 2010


குளியலறை

புதிதாய் பிறக்க

எனக்குள் நானே போராடும்

என் வீட்டு சின்ன மாளிகை



சந்தன சோப்பு

எத்தனை முறை தழுவும் போதும்

புத்துயிர் பெறுகிறேன்

ஒவ்வொரு முறையும்

உன்னைத் தடவுகையில்


ரவெல்

என் மீது படர்ந்திருந்த

பனித்துளிகள் சங்கமமாகின்றன

பூப்போன்ற உன் அணைப்பினிலே


போர்வை

உலகம் உறங்குகையில்

உனக்குள் ஒளிந்து கொள்கின்றேன்

ஒவ்வொரு நாளும் தவறாமல்


தலையணை


தலைசாய்த்து

தஞ்சம் புகும்

தாய்மடி நீதான்

Saturday, January 23, 2010

நீ போகிறாய்!!!


நீ போகிறாய்

பரிசாக....
நிறைய ஏமாற்றங்கள்
சகிக்கவே முடியாத துன்பங்கள்
மறக்க இயலாத துயரங்கள்
ஆறாத ஆழமான காயங்கள்

இவற்றுடன்
சின்னச் சின்ன சந்தோசங்கள்
எண்ணிடக்கூடிய பூரிப்பான நிமிடங்கள்
எல்லாவற்றையும் தந்துவிட்டு

என்ன சொல்லியும் கேட்காமல்
எவருக்கும் கட்டுப்படாமல்
நீ நகர்ந்து போகிறாய்

எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில்
அடுத்த சில கணங்களுக்காக காத்திருக்கிறோம்
புத்தாண்டு வருகிறதாம்...

அது இதுதானா.....


சில சமயங்களில் மென்மையாய்
மறுசமயத்தில் கடினமாய்
வரித்திட முடியாத சந்தோசத்தையும்
வாழ்வையே வெறுக்கும் வலியையும்
இருக்கும் போது இனித்து
இல்லாத போது வலித்து
எல்லாம் என்றும் தோன்றும்
எதுவும் இல்லை என்றும் சொல்லும்
உயிராய் இருக்கும்
உலகமே மறக்கும்
இனம்புரியாத
இன்னது தான் என்று
சொல்லமுடியாத
உணர்வு தானா
இந்தக் காதல் ????

Friday, January 22, 2010

அன்பில் ...........


தட்டி யாரிடமும்
தா என்று கேட்கமுடியாது
தந்ததை
எப்பவும் மறக்க முடியாது

கணக்கு வழக்கு
எனக்கு புரியலை
காரணம் சொல்லவும்
எனக்குத் தெரியலை

பெறும்போதெல்லாம்
உள்ளம் இனித்தது
கொடுக்கும் வழிதான்
தெரியாதிருந்தது

உதடு வேணும்னா
பொய்கள் சொல்லலாம்
உள்ளத்துக்கு மட்டும் தான்
சுகங்கள் தெரியும்

உலகுக்கு என்னை தெரியாது
உண்மையில் நான் ஓர்
கடன்காரி!!!!

Friday, January 08, 2010

என்னடா இது !!!!!!!!!!




அப்பப்பா !!!!!!!!!!
தாங்கமுடியலை
ஒண்ணுக்கு மேல ஒண்ணா
எத்தனை !!!!!
எவ்வளவு முயன்றும்
கட்டுப்படுத்தமுடியலை

எனக்கு வரும் கோவத்திற்கு
சுட்டு பொசுக்கிவிட தான் ஆசை
என்ன செய்ய முடிகின்றது இதனுடன்
இதற்கு பயந்து
வாழ்க்கை சக்கரம்
சுழலாமலா நிற்கின்றது

make up உம் மேல மேல
உடுப்பும் போட்டு
கடத்தி விட வேண்டியதுதான்
இன்னும் இருக்கின்ற
இரண்டு மாத குளிர்காலத்தையும்

காதலும் மாறுகின்றதா


கண்டதும் hello என்றான்
கவனியாத மாதிரி நகர்ந்தேன்
நீங்க ரொம்ப அழகாய் இருக்கிறீர்கள்
எதுவும் கேட்காதது போல நான்
உங்க phone no தாறியளா??
என்னடா வம்பு இது !!!
எரிச்சல் வந்தது
காலையில் வேலைக்கு
போகும் அவசரம் எனக்கு
இனியும் இது தொடர கூடாது
நல்ல வேளை பொட்டு இல்லை
மெல்லமாக சிரிச்சேன்
im already married என்றேன்
அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை
அசடு வழிகின்ற நிலை பாவமாக இருந்தது
அதன்பின் அவனை பார்த்ததாக நினைவு இல்லை
இரண்டு மாசம் போயிருக்கும்
பள்ளி தோழி ஒருத்தி ஒரே நச்சரிப்பு
பார்த்து சொல்லடி எப்பிடி என்ர ஆள் எண்டு
நானும் யாரையோ மனசில வைச்சு
முடிவெடுக்க கேட்கிறாள் எண்டு தான் நினைச்சேன்
KFC இற்கு வா ஞாயிற்று கிழமை 4 மணிக்கு என்றாள்
போனதும் திகைத்தேன்
கைகள் இணைத்தபடி அவளும் அந்த அவனும்
எனக்கு தான் சங்கடம்
அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை
அவள்தான் அறிமுகம் செய்தாள்
hello என்றான் எப்பவும் கண்டிராத தோரணையில்
அவர்கள் நெருக்கம் என்னையும் சகஜ நிலைக்கு இழுத்து வந்தது
பேச்சுவாக்கில்
சொல்லவே இல்லை எவ்வளவு நாளாய்
இது உங்களிடையே என்றேன்
அரை வருஷம் முடியுதடி என்றாள்
பகீர் என்றது எனக்கு
சுரீர் என்ற வலி தோன்றி மறைந்தது
அரைமணி நேரம் அதன்பின்பும் இருந்து
ஏதேதோ பேசினோம்
எந்தன் மனதில் மட்டும்
என்னவனும் இப்டித்தானோ
இன்னொரு பெண்ணிடம் அசடு வழிவான்
என்ற கவலை இருந்துகொண்டேயிருந்தது
காதலும் மாறுகின்றதா
காலத்தின் போக்கிற்கு ஏற்ப ??????????????