Friday, January 08, 2010

காதலும் மாறுகின்றதா


கண்டதும் hello என்றான்
கவனியாத மாதிரி நகர்ந்தேன்
நீங்க ரொம்ப அழகாய் இருக்கிறீர்கள்
எதுவும் கேட்காதது போல நான்
உங்க phone no தாறியளா??
என்னடா வம்பு இது !!!
எரிச்சல் வந்தது
காலையில் வேலைக்கு
போகும் அவசரம் எனக்கு
இனியும் இது தொடர கூடாது
நல்ல வேளை பொட்டு இல்லை
மெல்லமாக சிரிச்சேன்
im already married என்றேன்
அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை
அசடு வழிகின்ற நிலை பாவமாக இருந்தது
அதன்பின் அவனை பார்த்ததாக நினைவு இல்லை
இரண்டு மாசம் போயிருக்கும்
பள்ளி தோழி ஒருத்தி ஒரே நச்சரிப்பு
பார்த்து சொல்லடி எப்பிடி என்ர ஆள் எண்டு
நானும் யாரையோ மனசில வைச்சு
முடிவெடுக்க கேட்கிறாள் எண்டு தான் நினைச்சேன்
KFC இற்கு வா ஞாயிற்று கிழமை 4 மணிக்கு என்றாள்
போனதும் திகைத்தேன்
கைகள் இணைத்தபடி அவளும் அந்த அவனும்
எனக்கு தான் சங்கடம்
அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை
அவள்தான் அறிமுகம் செய்தாள்
hello என்றான் எப்பவும் கண்டிராத தோரணையில்
அவர்கள் நெருக்கம் என்னையும் சகஜ நிலைக்கு இழுத்து வந்தது
பேச்சுவாக்கில்
சொல்லவே இல்லை எவ்வளவு நாளாய்
இது உங்களிடையே என்றேன்
அரை வருஷம் முடியுதடி என்றாள்
பகீர் என்றது எனக்கு
சுரீர் என்ற வலி தோன்றி மறைந்தது
அரைமணி நேரம் அதன்பின்பும் இருந்து
ஏதேதோ பேசினோம்
எந்தன் மனதில் மட்டும்
என்னவனும் இப்டித்தானோ
இன்னொரு பெண்ணிடம் அசடு வழிவான்
என்ற கவலை இருந்துகொண்டேயிருந்தது
காதலும் மாறுகின்றதா
காலத்தின் போக்கிற்கு ஏற்ப ??????????????

2 comments:

  1. //நல்ல வேளை பொட்டு இல்லை
    மெல்லமாக சிரிச்சேன்//
    இந்த சிரிப்புக்கு அர்த்தம் என்னம்மா?
    சும்மா டைம்பாசுக்கு இப்டிதான் பண்ணுவாங்க பசங்க கண்டுகாதீங்க, கண்டுகிட்டாலோ யாரபாத்தாலும் சந்தேகம் வரும்.

    ReplyDelete
  2. அஷ்வின்,நன்றி உங்கள் கருத்துகளுக்கு!!
    உங்க time passing உம் இப்பிடித்தானா??

    ReplyDelete