Sunday, September 18, 2011

நினைவுகள் .


என்னை விட்டு
எங்கோ தொலைவில் நீ
இப்போது பூத்த
மல்லிகையின் வாசமாய்
என்னை சுற்றுகின்றது
உந்தன் நினைவுகள் ..

நீ


நிஜமாய்
நினைவாய்
நிழலாய்
நீயே இருக்கையில்
எப்படிச் சொல்வேன்
இன்னொரு திருமணத்திற்கு
சம்மதம் நான்?

மன்னித்துவிடு..


எனக்குள்ளே
ஆயிரம் தடவையாவது
உன்னிடம் மன்னிப்பு
கேட்டிருப்பேன்
என்ன செய்து என்னாகும்
அள்ளி தெளித்துவிட்ட
அந்த வார்த்தைகளை
கிள்ளி எடுத்துவிட
என்னால் முடியாதே
ஆதலால் மறுபடியும்
கேட்கின்றேன்
மன்னித்துவிடு..

உங்கள் டயரி



உங்கள் டையரிகளின்
ஓரிரு பக்கங்களை நானும்
தொட்டிருக்க கூடும் ..
என்னோடு பழகிய நாட்களின்
கனமான காயங்களின்
பரிசாக அவை ..
என்றும் கிழிக்கப்படாமல் இருக்கும் ..

வாழ்வு



தெளிவற்ற பார்வைகள்
தவறான கணிப்புகள்
பிழையான புரிந்துணர்வுகள்
தப்பான முடிவுகள்
அதன்பொருட்டு
தீராமல் நீளும்
கவலைகளை
தொடர்கதையாக்கி
தொடர்கின்றது
வாழ்வின் பயணங்கள்

உன் காதல்

உன் காதல் மட்டும் போதும்
சாவிற்கும் வாழ்விற்குமான
இந்த வாழ்க்கை போராட்டத்தில்
உயிரோடு என்னை வைத்திருக்க

புரிதல்


திறந்து பார்க்கும் ஆசையில்
மாறி மாறி முயற்சித்து
முடியாமல் ..
எல்லாப் பக்கமும்
அடித்துவிட்டாய்
சம்மட்டியால் என்னை
எனக்குள் நானே அமிழ்ந்து
நொறுங்கியிருக்கின்றேன்..
எனக்கே புரியாத என்னை
எப்படி முடியும்
இனி உன்னால்
படிக்க ..?

ஏன் போனாய்

என்னை மட்டும் தான்
நீ விட்டுப்போகின்றாய்
என நினைத்தேன்
என்னோடு சேர்த்து
ஏன் கவலைகளையும்
விட்டுப்போனாய்
என்னால் முடியவில்லை
எல்லாவற்றையும் தாங்குவதற்கு
என்னோடு வந்துவிடு
அல்லாவிடில்
என்னை நீ கொன்றுவிடு