Sunday, September 18, 2011

புரிதல்


திறந்து பார்க்கும் ஆசையில்
மாறி மாறி முயற்சித்து
முடியாமல் ..
எல்லாப் பக்கமும்
அடித்துவிட்டாய்
சம்மட்டியால் என்னை
எனக்குள் நானே அமிழ்ந்து
நொறுங்கியிருக்கின்றேன்..
எனக்கே புரியாத என்னை
எப்படி முடியும்
இனி உன்னால்
படிக்க ..?

No comments:

Post a Comment