காத்திருந்து
தருணம் பார்த்து
நடுங்கியபடி
வாய்குழற
உன்னிடம்
என் காதலைச்
சொன்னபோது
சொன்னாய்
நான்
அவனை
காதலிக்கிறேனென்று..
Saturday, October 13, 2012
எங்கே நான்?
கிறுக்கிய கவிதைகள்
எழுதிய கடிதங்கள்
அனுப்பிய வாழ்த்துக்கள்
என்று அத்தனையையும்
பத்திரப்படுத்திய நீ
என் இதயத்தை மட்டும்
ஏன் தொலைத்தாய்??
ஏன் கற்றுத் தந்தாய்?
காதலை எனக்கும் கற்றுத் தந்துவிட்டு
காணாமல் நீ போய்விட
கனவுகளை விரட்டுவதற்காய்
நினைவுகளோடு போராடியபடி நான்...
காதல்..
வலியில் துடிக்கையில்
வரிகள் தேடுறேன்
வார்த்தையின்றி
நான் புலம்பித் தவிக்கின்றேன்
கண்கள் எழுதிய
காதல் கதையின்று
கலைந்து போனதால்
கண்ணீர் நதியிங்கு
இரவின் மடியிலே
உறக்கம் தொலைத்து நான்
நினைவு ஊஞ்சலில்
நித்தம் சுழல்கின்றேன்
எனக்கு நீயென
எழுதிய எழுத்தில்
எழுத்துப் பிழைகள்
எதற்கு வந்தது
காதல் படகொன்று
கவிழ்ந்து கொண்டதில்
கரையில் இருந்தும்
நான் தத்தளிக்கின்றேன்.
நீ தந்த..
என்ன தந்து
நீ செல்கின்றாய்
என கேட்க முடியாது...
எண்ணற்ற
ஏமாற்றங்களை
நீ தந்துதானே
போயிருக்கின்றாய்???
தொடரும் மௌனம்
முற்றுப் பெறாத
விவாதங்களை விட
முடிவற்ற மௌனங்கள்
பிரச்சினைகளை
தீர்க்குமெனில்
நானும்
ஆசீர் வதிக்கின்றேன்
அவை தொடரட்டுமே...
Subscribe to:
Posts (Atom)