Sunday, November 29, 2009

கார்த்திகை மாதம் இது




வானத்தாயின் அரவணைப்பில்
சில்லிட்டு போயிருக்கிறாள் பூமித்தாய்
இடம்பெயர்ந்து இன்னல் பல அனுபவித்த
எம்மவர்கள் மீள வந்திருந்து
ஏக்க பெருமூச்சு விடுகிறார்கள்
தரிசாய் கிடக்கும் நிலங்களை பார்த்து

அங்கொன்றும் இங்கொன்றுமாக
தெரிகின்ற ஆள்கருப்பு
ஆட்களில்லாத வீடுகளில்
அட்டகாசம் செய்யும் ஆனைகள்
கால்கள் இரண்டுக்கும் நாலுக்கும்
பயந்து கூட்டம் கூட்டமாய்
கூடி வாழுது எங்களினம்.

அன்றைய நாட்களை
அசைபோடும் மனசுக்கு எல்லாம்
கனவாய் இருக்கிற வாழ்க்கை

செம்மண் கொண்ட எங்களூரில்
சேறில் கூட பூக்கள் பூக்கும் காலமிது
விளக்குகள் கொளுத்தி
விழாகோலம் பூணும் நாட்களிவை
உயிர்வாழ்தலிட்கான பயத்தில்
மையிருட்டுக்கள் வெறுமையாகவே
எங்கள் கல்லறை தெய்வங்கள் ...............