Thursday, May 12, 2011

ஒரு மரணம்




இன்றாவது யாரேனும்
இறந்திட வேண்டுமென
பிரார்த்திக்கும்
சவப்பெட்டி கடைக்காரன்
************************
மரணத்துக்காகவே மரணித்த
மலர்களாய் மலர்வளையங்கள்
************************
நீ விட்டுப் போன நாளில்
கண்கள் போதவில்லை - அவள்
கவலை தீர்ப்பதற்கு ..
ஓவென்று கத்தி
ஒப்பாரி வைக்கின்றாள்
***************************
ஊரழைத்து உண்ணவைத்து -உன்னை
உலகில் மீண்டும் வாழவைக்கும்
ஆத்ம சாந்தி அந்தியட்டி.