Friday, December 11, 2009

எனக்குள் நானே ...........


என்னில் நானே
தோற்றுப் போன போது
எனக்குள் நானே
தொலைந்து போனேன்
மீட்கப்பட முடியாத அளவிற்கு
நொறுங்கிய நிமிடங்களில்
இழந்து போன நிம்மதியை
தேடி நிரப்பிவிட
ஆசைப்படுகிறது மனம்
எங்கோ பிரிந்து
என்னை விட்டுப் போன சந்தோசத்தை
உன் இதயம் திருப்பி கொடுக்குமா???
ஏக்கம் பன்மடங்கு
என்னுள் இருந்தபோதும்
இன்னும் வெற்றிடமாகவே
இடைவெளிகள் எனக்குள் ..............