Saturday, October 13, 2012

காதல்..


வலியில் துடிக்கையில்
வரிகள் தேடுறேன்
வார்த்தையின்றி
நான் புலம்பித் தவிக்கின்றேன்
கண்கள் எழுதிய
காதல் கதையின்று
கலைந்து போனதால்
கண்ணீர் நதியிங்கு
இரவின் மடியிலே
உறக்கம் தொலைத்து நான்
நினைவு ஊஞ்சலில்
நித்தம் சுழல்கின்றேன்
எனக்கு நீயென
எழுதிய எழுத்தில்
எழுத்துப் பிழைகள்
எதற்கு வந்தது
காதல் படகொன்று
கவிழ்ந்து கொண்டதில்
கரையில் இருந்தும்
நான் தத்தளிக்கின்றேன்.

No comments:

Post a Comment