Saturday, January 23, 2010

அது இதுதானா.....


சில சமயங்களில் மென்மையாய்
மறுசமயத்தில் கடினமாய்
வரித்திட முடியாத சந்தோசத்தையும்
வாழ்வையே வெறுக்கும் வலியையும்
இருக்கும் போது இனித்து
இல்லாத போது வலித்து
எல்லாம் என்றும் தோன்றும்
எதுவும் இல்லை என்றும் சொல்லும்
உயிராய் இருக்கும்
உலகமே மறக்கும்
இனம்புரியாத
இன்னது தான் என்று
சொல்லமுடியாத
உணர்வு தானா
இந்தக் காதல் ????

No comments:

Post a Comment