Wednesday, May 05, 2010

உனக்காகவே




ஓ பெண்ணே ..
அலைபோல மோதும்
நினைவுகளை அடக்கம் செய்துவிடு
அருவிபோல ஓடும்
கண்ணீரை துடைத்தெறிந்துவிடு
உறையும் குருதியின்
ஓட்டத்தை துரிதப்படுத்திவிடு
கனக்கின்ற இதயத்தின்
பாரச் சுமைகளை இறக்கிவிடு

உயிருள்ளவரை ..
ஓடத் தயாராக இரு
வாழ்க்கை உனக்கானது
வாழவேண்டும் நீ - தொலைந்து போன
வசந்தங்களை தேடி
மீண்டும் தொடரட்டும் உன் பயணம்
மலருட்டும் இங்கு
புதியதொரு வாழ்வு உனக்காகவே

No comments:

Post a Comment