Tuesday, July 21, 2009

எல்லாமே நீதான்!

உன்னை நான் அறிந்துகொண்டது...
மற்றவர்கள் என்னைப் பாராட்டும்போது

உன்னை நான் புரிந்துகொண்டது...
எனது நண்பர்கள் வாழ்க்கையில் திசைமாறிச் செல்கையில்

அப்போது உணர்ந்தேன் உனது வழிகாட்டலின் அவசியத்தை
அப்போது வியந்தேன் உன்னுள்ளே உறைந்திருக்கும்
உலக தத்துவங்களை!

நான் பின்பு புத்தகங்களில் படித்ததையே..
நீயோ சோறூட்டும்போது ஊட்டினாய்!

கடவுளைத் தேடி நான் கோவிலுக்கு ஓடவில்லை...
காரணம் பெரியாரல்ல!
எனக்கு முன்னால், என்னுள்ளே நீயிருக்கையில்!


No comments:

Post a Comment