Tuesday, July 28, 2009

இடம்கொடு

காலை மாலை காத்திருந்தேன்
ஒரு கடைக்கண் பார்வைக்காக
பூக்களும் மாலையில் தலைகவிழ்ந்தன – உன்
புன்னகை காணாது
ஏட்டுச்சுரைக்காயே என்னளவில்
காதல் என்பது - உன்னைக்காணும்வரை
வானம் பூமியைத் தழுவிக்கொள்ள
வண்ண நிலவாய் நீ தெரிந்தாய்
நினைவே கனவாக கனவதுவே நினைவாக
வாழ்கிறேன் நானும் ஏகாந்தத்தில்
இதயத்தை நீ தரவேண்டாம் - என் அன்பே
எனக்கும் அதில் ஒரு இடம்கொடு

No comments:

Post a Comment