Sunday, July 26, 2009

உலகம்!

விழிகளை மூடுகிறேன்
தட்டிக்கேட்க முடியாமல்
தீயதைக் காணநேர்ந்தால்
காந்தியின் மேசைக் குரங்குபோல- ஆனால்
உள்ளத்தை..
அதன் உள்ளுணர்வை..
திரைபோட முடியுமா?
தொண்டைக்குழிவரை
எழுகின்ற வினாக்களைத்
திருப்பி அனுப்புகிறேன் எச்சிலுடன்
வலுக்கட்டாயமாக - பயத்தில்
வினாக்களை விழுங்கியவர் பலர்
விடைகளை வைத்திருப்பவர் பலர்
இதுதான் உலகம்!

No comments:

Post a Comment