Monday, September 21, 2009

வீணை


அறையின் மூலையில் உறங்கியது

மீட்டப்படாமலே

வீணையொன்று

புதிய பல இசைகள்

எல்லோர் மனதிலும்

அலைவடிவம் பெறாமலே

அடங்கியிருந்தது

உயிர்நரம்பு அறுந்திருந்தது

வீணையிலே

எங்கிருந்தோ

வீசப்பட்டகல்லினால்

உறங்கியது வீணை

மீட்டப்படாமலே

அலைந்தன மனங்கள்

இசை அலைகளைப்

பிரசவிக்கமுடியாமலே

No comments:

Post a Comment