Saturday, October 10, 2009

இரங்காத காலம்!



காத்திருந்தாள்
அவன் தருவானென்று,
கனிவான பார்வை;
கண்களால் ஒரு செய்தி;
காற்றினில் ஒரு முத்தம்;
கடைசிவரை
அவன்கரையவில்லை
கடந்துசென்றது
காலம் மட்டும்!
மறைந்துவிட்டாள்
அவளும் எங்கோ!


தேடுகிறான்
அவள் தடத்தை
நடந்துசென்ற
பாதைகளில்!
அவள் விழியை
கடந்துசெல்லும்
முகங்களில்!
துணிந்துவிட்டான்
காதருகில் மெல்ல
என் தேவதை நீ
என்றுகூட சொல்வதற்கு!
கரையவில்லை
காலம் மட்டும்
அடித்துச் சென்ற அவளை
திருப்பித் தருவதற்கு!

2 comments: