இரவின் நிசப்தத்தில்
விழிகள் மூட மறுத்ததால்
எழுதத் துடிக்கிறது
எந்தன் பேனா
கவி ஒன்று வரும் என்று
கைகள் கிறுக்கிய போது
எழுதப்பட்டது எல்லாம்
உந்தன் பெயர் மட்டுமே
வெண்ணிலவையும்
மின்னும் நட்சத்திரங்களையும்
பரந்து விரிந்த கறுத்த வானத்தையும்
பார்த்தபடி காத்திருக்கிறேன்
உந்தன் வருகைக்காக
No comments:
Post a Comment