Friday, October 16, 2009

என் கவிதை


இரவின் நிசப்தத்தில்

விழிகள் மூட மறுத்ததால்

எழுதத் துடிக்கிறது

எந்தன் பேனா


கவி ஒன்று வரும் என்று

கைகள் கிறுக்கிய போது

எழுதப்பட்டது எல்லாம்

உந்தன் பெயர் மட்டுமே


வெண்ணிலவையும்

மின்னும் நட்சத்திரங்களையும்

பரந்து விரிந்த கறுத்த வானத்தையும்

பார்த்தபடி காத்திருக்கிறேன்

உந்தன் வருகைக்காக

No comments:

Post a Comment