Saturday, October 17, 2009

காதல் நினைவுகள்!


தீராத காதல்
தரைமீது அலைக்கு
தட்டித் தரை கழித்தாலும்
கரையை வந்து பார்ப்பதற்கு
அலைகள் மறப்பதில்லை
கரையும் மௌனித்தது
கடைசிவரை நிறைவேறா
காதல் இதுவென்று
அலையது சுமந்துநின்ற
ஆசைக் காதலது
கைகூடாவிட்டாலும்
களித்திருந்தது தன்
காதலியைத் தினம் காண்பதனால்

கரையும்....
காதலதை மனம்சுமக்க
காதலரைத் தான் தாங்கி
களிப்படைந்தது

கரையின் மடியில்
கடலலையின் அரவணைப்பில்
கைகோர்த்து நாம் நடந்த
காலடித் தடம் தேடுகின்றேன்
கரையைத் தொடும் அலைகள்
களவாடிச் சென்றன அவற்றை
கரையைப் போல் நானிருக்க
தழுவிச் செல்கின்றன அலையாக
உன்நினைவுகள்!

No comments:

Post a Comment