Tuesday, February 08, 2011

எங்கே போனார்கள்

எதிரே பார்த்தது ரோஜா
எதையோ தேடியபடி நிலா
என்னைப் போலவே அவளும்
இதயத்தை தொலைத்த அவ்
இருவரையும் தேடுகிறாளா
கேள்விக்குறியுடன்
மெல்ல சிரித்தது

திரும்பிப் பார்த்தது நிலா
அழகான ரோஜாவின்
அர்த்தமற்ற வாடல்
அவர்களுக்கான ஏக்கம்
தான் என புரிந்துகொண்டது
எங்கள் இருவரையும் இப்படி
ஏங்க விட்டுவிட்டு
எங்கே போனார்கள்
ஓடத் தொடங்கிற்று

கடற்கரை மணலில்
ஹனிமூனில் அவர்கள்
நாணம் கொண்டு நகர்ந்தது நிலா
மறுநாள் விரைந்தது
மகிழ்வான செய்தி சொல்ல
ரோஜாவைத் தேடி
நிலா முகம் கண்டு
நிம்மதியடைந்தது ரோஜா
இதழ்கள் உதிர்த்து
இன்புற்று கொண்டது

No comments:

Post a Comment