Wednesday, March 09, 2011

காதல் அழிவதில்லை

அன்று போலவே இன்றும்
அவள் வீட்டு வாசலில் நான்
கண்ணில் அதே காதல்
நெஞ்சில் அதே உருக்கம்
மனதில் அதே ஏக்கம்
என்னை வரவேற்கிறாள் அவள்
தன் பேரக் குழந்தையுடன்
காதல் அழிவதில்லை என்பதை
அவள் கண்ணில் தான் நான்
வாசித்தேன் யாசித்தேன்

No comments:

Post a Comment