Sunday, April 03, 2011

சிதறல்கள்


உனக்கு பிடிக்கும் என்று
ஒவ்வொன்றாய் நான் மாற
உன்னை பிடிக்கலை என்று
உயிரோடு கொன்றாய் என்னை.
*****************************************
நிலவை வெறுக்கவா
கனவை முறைக்கவா
நீயற்ற இரவுகளில்
*****************************************
எல்லாவற்றையும் மாற்றிவிடுவேன்
நினைப்பது போலவே செய்துமுடிப்பேன்
நேற்று மட்டும் மீண்டும் கிடைத்தால்
கனவுகளோடு நேற்று போலவே இன்றும்
****************************************
வசந்தத்தை தொலைத்தவர்கள் வாழ்வில்
தென்றல் என்றும் வீசாது விடினும்
வாடையாவது வீசட்டுமே
வானம் பூமி இரண்டும் வாழ்த்த
வாழும் நாளும் தோன்றட்டுமே

No comments:

Post a Comment