Saturday, April 16, 2011

அந்நியன்

விடிவெள்ளி மறையாத காலை
விழிதூங்க முடியாத கனவு
விமான பயணம்.....
என்ன வாங்கலாம்
என்ன கொடுக்கலாம்
எல்லோர் நினைவும்
முட்டி மோதிற்று...
அம்மாவுக்கு அப்பாவுக்கு
ஆசைத்தங்கைக்கு
அடுப்படி வரைக்கும் என்ன தேவையோ
கணக்கு போட்டாயிற்று
அம்மா கூட அறுபது நாள்
தங்க போகிறேன்
நினைவின் சுகத்தில்
அந்நாளும் வந்தது ...
அத்தையும் மாமாவும்
ஏயார்போர்டில்
அப்பாவை காணலை
பயணம் தொடங்கிற்று.....
பொண்ணை கொடுத்த இடத்தில
கையை நனைக்கிறதே...
அப்பாவும் அம்மாவும்
அரைநாள் தங்கவும்
சங்கடப்பட
அத்தையிடம் மெல்லகேட்டேன்
அங்கைபோய்
நிக்கபோறியளோ?!
நுளம்பு பிள்ளை
ஆஸ்பத்திரியும் பெரிசில்லை
அவையள் வந்து நிக்கட்டும்
அல்லது போய் பகலோட திரும்பிடுங்கோ
ஓவென்று அலறும்
என்மனது அறியாமல்
அடுக்கிப்போனா அடுக்கடுக்காய்
எங்களின் இரண்டு மாத
ப்ரோக்ராமை
அத்தை வீட்டுக்கு
அடிக்கடி வர
அம்மா சங்கடப்பட
ஆசை தங்கை
என்பிள்ளைகளை தூக்க கூட
பயந்துநிற்க
எனக்கு பிடிக்கும் என்று
அப்பா வாங்கிவந்த
பிலாப்பழம் மணம் வீசியபடி
மூலையில் கிடக்க
எல்லாவற்றிற்கும்
அந்நியனாய் எந்நாட்டில்
நான் ...

2 comments:

  1. உண்மையை அப்படியே போட்டு உடைத்த வரிகள்.அற்புதம் !

    ReplyDelete