Friday, December 16, 2011

புண்ணாகும் மனசு...


சேற்றில் பிறந்த தாமரை,
புனிதமாகி அந்தப்
பெருமாளை சென்றடைகிறது...
சிப்பிக்குள் வளர்ந்த முத்து,
பெறுமதி மிக்கதாகி
பேரம் பேசப்படுகிறது...
மண்ணுக்குள் உருவான பொன்,
மலை போல் விலை பேசி
மதிப்புக் கொடுக்கப்படுகிறது...
மடியில் சுமந்த உன் அன்னை
பண்ணிய தவறுக்கு அறியாமல் பிறந்த -உன்
மனசு மட்டும் ஏன் புண்ணாக்கப்படுகிறது...
இந்த மனசறியா மானிடர்களால்.....

No comments:

Post a Comment