Friday, December 16, 2011

மலரே...


மொட்டென்னும் பெயரில்
சட்டென்று வளர்வாயடி...
ஒரு சில நாளில்
உன் முகம் திறப்பாயடி...
ஓராயிரம் பேர்
உன்னை ரசிப்பாரடி...
ஒருவனுக்காக நீ
காத்து இருப்பாயடி...
உன்னை நாடி வரும் - வண்டின்
ஓசை அறிவாயடி...
ஒத்திகை இல்லாமல்
உன்னைக் கொடுப்பாயடி...
தேடி வந்தவன்
தேவை முடியுமடி... - அவன்
திரும்ப நினைக்கையிலே -உன்
திரு முகம் வாடுமடி...
வாழ்ந்த ஒரு நாளில்
வள்ளலாய் வாழ்வாயடி...
இறந்தும் உன் உடல்
மண்ணுக்கிரையாகுமடி ...
மலரே இதுதான் வாழ்வின் நியதியடி...
மறந்தும் மறுபிறப்பு பிறக்க நினைக்காதே...

No comments:

Post a Comment