Sunday, August 02, 2009

உன் பாசம்

பாசம் என்பது யாருக்கு இல்லை
பளிச்சென வெளிப்படுத்துவதில்தான் பலருக்கு சிக்கல்
பதுக்கிவைத்தால் எவருக்கும் தெரியாது
உன் பாசம் என்பதை மற்றவர் உணர்ந்தாலே - அது
மலையருவியாக உன்மீது சொரியும்
பலாப்பழம்போல பாசமும் என்றால் - எவர்
காத்திருப்பார் அது கனியும்வரை
இன்று உன்னுடன் அருகில் இல்லை
நேற்றுவரை உன்னுடன் ஒன்றாக உண்டு உறங்கியவர்கள்
நாளையும் எப்படியோ யாரறிவார் நம் விதியை
வட்டிபோட்டு சேர்த்திடாமல் வாரியிறைத்துவிடு
வாழும்காலம் முடிந்தபின்னும் வாழும் உன் பாசம் என்றும்

No comments:

Post a Comment