Sunday, August 02, 2009

நகரம்

புழுதிபடிந்த தெருக்கள்
புகை கசியும் ஊர்திகள்
புன்னகை மறந்த மனிதர்கள்
பூக்களில்லாத ஆலயங்கள்
இயக்கமின்றியே இயங்குகிறது நகரம்
பழைய கடதாசிகள் குப்பைகளாக
வேலியை அலங்கரிக்கின்றன
உருக்குலைந்த பனையோலைகள்
வீதியோரத்தில் நானும் எவர்க்கும் பயனின்றி

No comments:

Post a Comment