Thursday, August 20, 2009

என் பயணம்

இழப்புக்களின் வலிகளையும்
பிரிவுகளின் துயரத்தையும்
உணர்ந்திருக்கின்றேன் நான்
சுமப்பதற்காக பிறந்ததனால்
சுகமாகிப் போயின சுமைகளும்
இனியென்ன உள்ளதென்று
இருவிழி நனையவில்லை
மனமெல்லாம் முரடாகி
மானிடரை வெறுக்கவில்லை
கண்ணீர்த்துளிகளின் உப்புச்
சுவைகூட கரிப்பதில்லை எனக்கு
வலிகளையே வாழ்க்கையாக்கி
நீண்டு செல்கின்றது என் பயணம்
விழிவழி வழியும் நீரை
நிமிண்டி விடுகின்றது என் விரல்கள்
யாருக்கும் தெரியாமல்
வடுக்கள் ஏதும் குறையாத போதிலும்
பாதைகள் யாவும் கரடாக இருக்கையிலும்
பயணிக்கவேண்டிய கட்டாயத்தில் நான்........

No comments:

Post a Comment