Thursday, August 20, 2009

வாழ்க்கை வாழ்வதற்கே தான்

வலிகள் சுமப்பதற்கே தான்
இதயம் எதையும் தாங்கவே தான்
இடிபுயல் போல பிரச்சினை வந்து
இருப்புக்கள் எல்லாம் இழந்ததன் பின்பும்
உறவுகள் என்ற சுயநலம் கொண்ட
மனிதர்கள் எல்லாம் உன்னை
ஒதுக்கிய பின்பும்
பணம் பொருள் பதவி எல்லாம்
பறிபோன பின்பும்
நம்பிக்கையோடு நீ காத்திரு
நாளை உனக்கான விடியல்
வரும் அதுவரை பொறுத்திரு
ஏனெனில் வாழ்க்கை வாழ்வதற்கே தான்.

2 comments:

  1. வலிகளை தாங்கி
    இதயத்தில் சுமைகளைத் சுமந்து
    எல்லாவற்றையும் இழந்து
    சுயநல உறவுகளால் ஒதுக்கப்பட்டு
    நம்பிக்கையுடன் காத்திருந்தால் விடியல் கிடைக்குமா?
    வாழ்க்கை வாழ்வதற்காகதான் மறுப்பதற்கில்லை
    வாழ்வதற்கு வழியற்று, நாதியற்று, எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாக இருக்கும் போது
    நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லில்
    எதை, யாரை நம்பி காத்திருக்க
    விடியல் வருமென்று பொறுத்திருக்க,
    வாழ்க்கை வாழ்வதற்கே,
    எவ்வாறு வாழ அகதியாகவா? அடிமையாகவா? சுதந்திரமாகவா?

    - குறும்புக்குண்டன் -

    ReplyDelete
  2. தமிழிஸில் உங்கள் பதிவுகளை இணைத்தால் உங்கள் திறமைகளை இன்னும் வெளிக்கொண்டு வரமுடியும்
    அதற்கான முகவரி
    www.tamilish.com

    ReplyDelete