Friday, September 25, 2009

முடியாத இரவுகள்


நீண்ட இரவு
கொட்டும் பனித்துகள்
கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்
தேய்ந்துபோன நிலா
மெல்லிய குளிர்காற்று

சில்லிட்ட மெத்தையில்
தூங்க மறுக்கும் விழிகளுடன்
போராடியபடி நான்

நினைவுகளின் சுழற்சியில்
கடந்தகாலங்கள் களிப்பூட்டும்
ஏக்க பெருமூச்சுக்களாய் மட்டும்

எல்லாம் கனவோ என்கின்ற மாதிரி
கடந்து போகின்ற நிகழ்காலம்

எதிர்காலம் பற்றியஎவ்வித தீர்மானமும்
இன்னும் இல்லாத போதிலும்
கண்ணயர்ந்து போகின்றேன்
நாளை பார்க்கலாம் என்ற நம்பிக்கையுடன்
நனைந்து கிடக்கும் என் தலையணையில்

3 comments:

  1. சுகமான நினைவகளின
    நிறைவன வரிகளில்
    கனவுகளை உலாவிட்டமை தனியழகு
    .........

    எனறாலும் கனவின் சுகங்களின்
    சுமைகளுடன்
    தலையணையும் சேர்ந்து
    தனிமையை போக்கி தானும் நனைந்து கொள்வது
    உங்கள் உணர்வுகளில் ஏக்கத்தின்
    உச்சம்....!

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கள் யாவற்றுக்கும் நன்றி.

    ReplyDelete