Sunday, January 31, 2010


குளியலறை

புதிதாய் பிறக்க

எனக்குள் நானே போராடும்

என் வீட்டு சின்ன மாளிகை



சந்தன சோப்பு

எத்தனை முறை தழுவும் போதும்

புத்துயிர் பெறுகிறேன்

ஒவ்வொரு முறையும்

உன்னைத் தடவுகையில்


ரவெல்

என் மீது படர்ந்திருந்த

பனித்துளிகள் சங்கமமாகின்றன

பூப்போன்ற உன் அணைப்பினிலே


போர்வை

உலகம் உறங்குகையில்

உனக்குள் ஒளிந்து கொள்கின்றேன்

ஒவ்வொரு நாளும் தவறாமல்


தலையணை


தலைசாய்த்து

தஞ்சம் புகும்

தாய்மடி நீதான்

2 comments:

  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete