Wednesday, March 09, 2011

மன்னிப்பாயா

மன்னிப்பாயா ??
என்னைச் சுமந்தபடி
சுவரோரமாய் நீ
உன்னைச் சுமந்தபடி
மணமேடையில் நான்
காலங்கள் கடந்தது
கமலியின்
கல்யாண நாளில்
ஹாய் என்கிறாய்
அன்று கழுத்தைக் கொடுத்த நான்
இன்றுனக்கு ஹாய்
சொல்லக் கூட முடியாமல்
கட்டுபட்டு நிற்கின்றேன்
மன்னிப்பாயா

மன்னிப்பாயா
என கேட்கிறேன் நான்
அது கேட்க இவளுக்கு மனசிருக்கா
என நினைக்கிறாய் நீ

மன்னிப்பு கேட்பது ஈசி
மன்னித்து விடுவது கஷ்டம்
அட்வைஸ் விடுவது ஈசி
அட்வைஸ் கேட்பது கஷ்டம்

காதல் அழிவதில்லை

அன்று போலவே இன்றும்
அவள் வீட்டு வாசலில் நான்
கண்ணில் அதே காதல்
நெஞ்சில் அதே உருக்கம்
மனதில் அதே ஏக்கம்
என்னை வரவேற்கிறாள் அவள்
தன் பேரக் குழந்தையுடன்
காதல் அழிவதில்லை என்பதை
அவள் கண்ணில் தான் நான்
வாசித்தேன் யாசித்தேன்