Sunday, March 18, 2012

எங்கனம் புரிந்திருப்பாய்...


நான் பார்த்து ரசித்த நிலா -உன்
பக்கம் வந்திருக்கும்,
பார்க்காமல் போயிருப்பாய்.
தழுவிச் சென்ற தென்றல்
உன்னை வருடிச் சென்றிருக்கும்,
நெருடலாய் உணர்ந்திருப்பாய்.
எனைக் கடந்த கரு மேகம்-உன்
காலடியில் விழுந்திருக்கும்,
வெள்ளம் என்று எண்ணி
விலகி நடந்திருப்பாய்.
என் உணர்வுகளைப் புரியாத
உன்னுள்
புதைந்த என் இதயத்தை - நீ
எங்கனம் புரிந்திருப்பாய்...

No comments:

Post a Comment