Sunday, September 27, 2009

சாட்சி!



முகாரி இசைக்கின்றன
விடுவிக்கப்பட்ட நிலத்தில்
வீதிகளும் வீடுகளும்
தாம் தாங்கியவரைக்
காணாது!

சல்லடைபோடுகின்றன
வன்னிக்காடுகளிலும்
வயல்வெட்டைகளிலும்
தம்மை வளர்த்தோரின்
எச்சம்தேடிகால்நடைகள்!

துணைநிற்கின்றன வேலியில்
வேர்கள் அறுக்கப்பட்டு
கிளைகள் தறிக்கப்பட்ட
கம்பிக்கட்டைகள்
கதியிழந்த எம்
உறவுகளுக்கு சாட்சியாக!

2 comments:

  1. இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.
    புதிய பதிவுகளில் பார்க்கவும்

    ReplyDelete