Sunday, October 04, 2009

விதியால் தொலைந்த அழகு



உன்னை பார்க்காமல்
ஓடிப்போயிற்று ஈராண்டு
கடிகார முள்ளை அடிக்கடி
பார்த்திருக்கேன்
ஒவ்வொரு வினாடி
நகர்தலிட்கும் காத்திருக்கேன்

போய்விட்ட நாட்களில்
நினைத்து பார்க்கலை
நீ இப்படி மாறியிருப்பாய் என்று
ஒட்டிய கன்னமும்
ஓரளவு லீக்கல் விழுந்த பற்களும்
உச்சி வரை முடி நரைச்சு
என்ன நடந்தது??

நன்றாகத்தானே இருந்தாய்
நான் இங்கு வரும்பொழுது
காலம் பறித்ததுவோ??
கவலை தான் தின்றதுவோ ??
அழகான அம்மா நீ
அவசரமாய் மாறியதேன்??

உன் படம் பார்த்த பையன்
யாரிந்த கிழவி என்று
தயங்காமல் கேட்கின்றான்
என்ன பதில் நான் சொல்ல??

விம்மல் எழுகையிலே
விரல்கள் தழுவுது
உந்தன் புகைப்படத்தை
கணனியிலே!

கால நகர்வின்
கடைசி நிமிடங்களையும்
வெறுத்து சபிக்கின்றேன்
இறந்து கொண்டிருக்கும்
உன் இளமையினை
மீட்க தெரியாமல்!

1 comment:

  1. //கால நகர்வின்
    கடைசி நிமிடங்களையும்
    வெறுத்து சபிக்கின்றேன்
    இறந்து கொண்டிருக்கும்
    உன் இளமையினை
    மீட்க தெரியாமல்//

    நல்ல வரிகள்
    ஆழமாக பார்த்தால்
    சரியாக புரியும்

    ReplyDelete